எந்திரனுக்குப் பிறகு ரஜினி அரசியல் முடிவு!-சத்யநாராயண ராவ் பேட்டி


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.வழக்கமாக ரஜியினின் ஒவ்வொரு படம் ரிலீசுக்கு முன்பும், தேர்தலுக்குத் தேர்தலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்திகள் வருவது வழக்கம்.அந்த வகையில் இப்போது எந்திரன் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டுள்ள நிலையில், ரஜினியின் அண்ணன் இதைத் தெரிவித்துள்ளார்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் அளித்த கூறுகையில்,எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் தம்பி ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார். அவருக்கு நல்லது செய்ய மட்டும்தான் தெரியும். எப்போதும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இதயம் ரஜினிக்கு.மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து எந்திரன் படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.அவரே இதுபற்றி தெளிவாகக் கூறிவிட்டதால் (!), ரசிகர்களாகிய நீங்கள் எந்த குழப்பத்துக்கும் (!!) ஆளாகத் தேவையில்லை. நிச்சயம் உங்களுக்கு நல்லது எதுவோ அதைத்தான் தம்பி செய்வார்.தம்பி வந்தால், நிச்சயம் இன்றைக்கு உள்ள பண அரசியலுக்கு முடிவு கட்டுவார். அவருக்கு இதுபோன்ற சூழலே பிடிக்காது. பார்ப்போம்… ஆண்டவன் என்ன கட்டளை இடப் போகிறாரோ…தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. நூலகம், மக்களுக்கு முழுமையாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம். எந்திரன் படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்றார் சத்யநாராயணா.வேலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ரசிகர் மன்றங்களின் வேண்டுகோளுக்கிணங்க சத்யநாராயணா ராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...